தேடப்பட்ட குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

தேடப்பட்ட குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

தேடப்பட்ட குற்றவாளி ஏர்போர்ட்டில் கைது

கேரளாவில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டர்.
கேரளாவில் தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி, P விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க வந்த பயணியரின் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர். அப்போது, கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த பஷீர் முகமது, 51, என்பவரின் ஆவணங்களை பரிசோதித்த போது, மலப்புரம் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரிந்தது. இவர், கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்ததும் தெரிந்ததால், அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். பின், கேரள மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து அழைத்து, பஷீர் முகமதுவை ஒப்படைத்தனர்.

Tags

Next Story