ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஆற்றங்கரையோர  மக்களுக்கு எச்சரிக்கை

 மழை காரணமாக பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படவுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை காரணமாக பாலாறு, பொருந்தலாறு அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படவுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையின் நீர் மட்டம் 09.01.2024, 11.00 மணியளவில் 64.24 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், விரைவில் பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து உபரிநீர் சண்முகந்தி ஆற்றில் திறந்து விடப்படவுள்ளது. எனவே பாலாறு, பொருந்தலாறு மற்றும் சண்முகநதி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story