தஞ்சாவூர் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் வாட்ச்மேன் மர்மமான முறையில் மரணம்....

தஞ்சாவூர் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் வாட்ச்மேன் மர்மமான முறையில் மரணம்....
பலி
தஞ்சாவூர் சூப்பர் மார்க்கெட் கழிப்பறையில் வாட்ச்மேன் மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் கழிப்பறை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாராஅல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது.
தஞ்சை அருகே நார்த்தேவன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி (58). இவர் புதுக்கோட்டை சாலையிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாட்ச்மேனாகப் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 14 ஆம் தேதி வழக்கம்போல பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஏப்.16 செவ்வாய்க்கிழமையன்று சூப்பர் மார்க்கெட்டில் உள்ள 2 கழிப்பறைகளில் ஒன்று, தொடர்ந்து இரு தினங்களாக உள்பக்கம் தாழிடப்பட்ட நிலையில், இருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கழிப்பறை மேல்பாகம் வழியாக எட்டிப் பார்த்த போது, வாட்ச்மேன் கருணாநிதி கழிப்பறையில் உயிரிழந்து கிடப்பது நேற்று தெரிய வந்தது. தகவலறிந்த மருத்துவக்கல்லூரி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து மருத்துவக் கல்லூரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கழிப்பறை சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாராஅல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று விசாரணை நடக்கிறது.

Tags

Next Story