திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல்

திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல்

நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது.


நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது.
நாகை நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்திராபதீஸ்வரர் கோவில் சித்திரை பரணி திருவிழாவை ஒட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருமருகல் ஒன்றிய அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்.கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி கலந்து கொண்ட நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ வகைகள், நீர், மோர், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் விநாயகசுந்தரம், கார்த்திகேயன், ஒன்றிய பொருளாளர் குழந்தைவேலன்,ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய மகளீரணி செயலாளர் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் நடராஜன் செய்து இருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story