திமுக சார்பில் தண்ணீர் பந்தல் : அமைச்சர் திறந்து வைத்தார்!

நாசரேத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பேரில் கோடை காலத்தில் பொதுமக்கள் தாகம் தணிக்கும் வகையில் நாசரேத்தில் நகர திமுக சார்பில் கே.வி. கே. சாமி சிலை பஜார் அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தண்ணீர் பந்தலை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழ ஜூஸ், பழ வகைகள், நீர், மோர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞ ரணி அமைப்பாளர் இராமஜெயம், வழக்கறிஞர் கிருபாகரன், நாசரேத் நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் ரவி செல்வக்குமார், மாமல்லன், பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், வார்டு கவுன்சிலர்கள் அதிசயமணி நல்லதுரை, திமுக மாவட்ட பிரதிநிதிகள் முருகத்துரை, அன்பு தங்கபாண்டியன், நகர அவைத் தலைவர் கருத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story