குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

 குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது இதனால் இப்பகுதியில் வெப்பம் தணிந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

அருகில் சீராக தண்ணீர் விழுந்தது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இரவிலும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தற்பொழுது அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்தை ஏற்பட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story