கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு

கொடுமுடியாறு அணையில் தண்ணீர் திறப்பு

தண்ணீரை திறந்துவிட்ட சபாநாயகர் அப்பாவு 

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளவு கொண்ட கொடுமுடியாறு அணை உள்ளது. தற்போது நீர் இருப்பு 50.50 அடி உள்ளது. இந்த அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.இதனை அடுத்து இன்று அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் முன்னிலையில் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் கிஷன்குமார்,களக்காடு நகராட்சி துணை தலைவர் பி.சி.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story