வைகையில் நீர் திறப்பு - மானாமதுரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகையில் நீர் திறப்பு - மானாமதுரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மானாமதுரை வந்தடைந்த வைகை நீர்

வைகை அணையில் தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு 5000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றின் வழியாக தண்ணீர் இருக்கரையிலும் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மானாமதுரை நகராட்சி சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 1ஆம் தேதி சிவகங்கை மாவட்ட பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story