தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

செய்யாறில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


செய்யாறில் கோடை வெப்பத்தை தணிக்க தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் செய்யாறு பேருந்து நிலையம் அருகில், மாவட்ட துணைத் தலைவர் அருள் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை கலந்து கொண்டு திறந்து வைத்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story