ராசிபுரத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல்

ராசிபுரத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல் 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் அமமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடும் வெயில் வாட்டி வருகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி. தினகரன், அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர்.

அதன்படி அமமுக வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் ஏ.பி.பழனிவேல் தலைமையில் ராசிபுரம் நகர பொறுப்பாளர்கள் தர்மராஜ் , பூபதி ஆகியோர் முன்னிலை ஏற்பாட்டில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே‌ தண்ணீர் பந்தல் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, கம்மங்கூழ் ,இளநீர் குளிர்பானங்கள் உள்ளிட்ட பல வகைகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.பன்னீர்செல்வம், பொருளாளர் வழக்கறிஞர் அன்புச் செழியன், பொதுகுழு உறுப்பினர் உதயகுமார், ராசிபுரம் ஒன்றிய செயலாளர் ராஜா, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகேசன், நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் பெரியசாமி,மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் , வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story