தச்சநல்லூரில் தண்ணீர் பந்தல் திறந்த பாஜகவினர்

தச்சநல்லூரில் தண்ணீர் பந்தல் திறந்த பாஜகவினர்

தண்ணீர் பந்தல் 

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தச்சை வடக்கு மண்டலம் சார்பாக தச்சநல்லூரில் நீர்,மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று (மே 7) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்,மோர் மற்றும் பழங்கள் வழங்கினார். இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story