சேலம்: மக்களுக்காக தண்ணீர் பந்தல்

சேலம்: மக்களுக்காக தண்ணீர் பந்தல்

தண்ணீர் பந்தல்

சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

சேலம்- பெங்களூரூ பைபாஸ் சாலை இந்திராநகரில் உள்ள சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் சார்பில் அதன் அலுவலகம் முன்பு நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது. தலைவர் எம்.மந்திரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயலாளர் பி.செல்வம், பொருளாளர் டி.கோவிந்தன், அவைத்தலைவர் ஆர்.கே.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கே.செல்வம் வரவேற்றார். நீர்மோர், கம்மங்கூழ், தர்ப்பூசணி பழம், மாங்காய், பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அசோசியேஷன் பொறுப்பாளர்கள் சேகர், ராமசாமி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜே.கே.என்.முருகேசன் நன்றி கூறினார். நீர் மோர் பந்தலில் தொடர்ந்து வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) வரை பகல் முழுவதும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்படும் என்று சேலம் கட்டிட மேஸ்திரி அசோசியேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story