தண்ணீர் பந்தல் திறப்பு விழா

தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்கல்பட்டு எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் செங்கல்பட்டு எம்எல்ஏ பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆலப்பாக்கம், மேல மையூர், வல்லம், வீரபுரம் ,ஊராட்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் பொதுமக்கள் கோடையை எதிர் கொள்ள நீர்மோர் மற்றும் இளநீர், தர்பூசணி பழம், குளிர்பானங்கள் வழங்கினார்.

உடன் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய அவை தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள் , ஒன்றிய கவுன்சிலர்கள் , மற்றும் திமுக நிர்வாகிகள் ,ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story