அணைகளில் நீர் திறப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணைகளில் நீர் திறப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு 

தூத்துக்குடி; திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், அரியநாயகிபுரம் அணைக்கட்டிலிருந்து தாமிரபரணி ஆற்றில் 5340 கன அடி கொள்ளளவு நீர் இன்று (03.12.2023) வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டுகளில் அதிக அளவு நீர்வரத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும் எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story