திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
தண்ணீர் பந்தல்
இடக்கழிநாடு பேரூராட்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதிக்குட்பட்ட இடக்கழிநாடு பேரூராட்சியில் திமுக சார்பில் பேரூராட்சி தலைவர் சம்யுக்தாஅய்யனார் ஏற்பாட்டில்,கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அவைத்தலைவர் இனியரசு, பேரூர் செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள், பணநுங்கு உள்ளிட்டவைகளை வழங்கினர்.

Tags

Next Story