நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக, பெரம்பலூர் 4 ரோடு அருகே அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் டிசம்பர் -3 ஆம் தேதி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் இரத்தினவேல் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில், மாவட்டத் தலைவர் ஹமர்தீன் , பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு, குன்னம் தொகுதி செயலாளர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது, பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், காலியாக உள்ள பொறுப்புகள் நியமித்தல், பாராளுமன்ற தேர்தல் வியூகம் ஆகியவைகள் குறித்து முக்கிய தீர்மானங்களாக நிறை வேற்றப்பட்டன. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story