குடிநீர் உடைப்பை சரி செய்யணும்..!

குடிநீர் உடைப்பை சரி செய்யணும்..!

சங்ககிரி அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்குமாறு வேண்டுகோள் வலுத்துள்ளது.

சங்ககிரி அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்குமாறு வேண்டுகோள் வலுத்துள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் மற்றும் 14 கிராம ஊராட்சிகளுக்கு புள்ளாக்கவுண்டம்பட்டி காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தினசரி காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் வைகுந்தம் பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து மொத்தையனூர் உயர்மட்ட நீர்த்தேக்க நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆலத்தூர் ரெட்டிபாளையம் நத்தமேடு என்ற இடத்தில் ராசச குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரு மாதங்களாக தண்ணீர் வீணாகி சாக்கடையில் கலக்கிறது . இதனால் சங்ககிரி பேரூராட்சி , கிராம ஊராட்சிகள் போதுமான குடிநீரின்றி மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் உடைப்பு ஏற்பட்ட சாலை பழுதடைந்து உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சில கிலோமீட்டர் தூரம் வாகனம் சுற்றி வருகிறது.

இதனால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை மாற்றி தண்ணீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story