மோகனூரில் சமுதாயக்கூடம் வேண்டும் - ஆட்சியரிடம் மனு

மோகனூரில் சமுதாயக்கூடம் வேண்டும் - ஆட்சியரிடம் மனு

ஆட்சியரிடம் மனு

மோகனூர் டவுன் பஞ்சாயத்து 10வது வார்டு பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
மோகனூர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், சமுதாயக் கூடம் கட்டித்தரக் கோரி பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில்... நாமக்கல் மாவட்டம், மோகனூர் டவுன் பஞ்சாயத்து 10வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எங்களுக்கு, 3 தலைமுறைகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எங்கள் மக்களுக்கு, சமுதாயக்கூடம் கட்டித்தர பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். மேலும், இங்குள்ள நத்தம் புறம்போக்கில், எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு பட்டா போட்டு வழங்கிவிட்டனர். அதேபோல், எங்கள் சமூகத்திற்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலத்தை, சிலர் ஆக்கிரமித்து முறைகேடாக மனை பட்டா வாங்கி உள்ளனர். அவற்றை மறு பரிசீலனை செய்து, அதே இடத்தில், சமுதாயக்கூடம் கட்டி எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story