சிவகங்கையில் கிரிக்கெட் மைதானம் வேண்டும் - சிறுவன் கோரிக்கை

சிவகங்கையில் கிரிக்கெட் மைதானம் வேண்டும் - சிறுவன் கோரிக்கை

சிவகங்கையில் கிரிக்கெட் மைதானம் அமைத்துத் தர மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார்.


சிவகங்கையில் கிரிக்கெட் மைதானம் அமைத்துத் தர மாவட்ட ஆட்சியரிடம் சிறுவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிவகங்கை அருகே உள்ள கக்கன் பாக்கம் தெருவை சேர்ந்த அகமது இர்பான் என்ற மாணவன் சிவகங்கை மாவட்டத்தில் கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். கிரிக்கெட் வெறும் விளையாட்டு கிடையாது. இது உலகத்தை ஒன்றிணைத்து வருகிறது. புதிய நாடுகள் கிரிக்கெட் விளையாட்டில் இணைந்து வருகின்றன. இதனால் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மைதானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சிவகங்கை அருகே உள்ள கக்கன் பாக்கம் தெருவை சேர்ந்த அகமது இர்பான் என்ற மாணவன் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளதாகவும், கடந்த நான்கு வருடங்களாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு மாவட்ட அளவில் விளையாடி, தற்போது மாநில அளவில் விளையாடுவதற்கு பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட தலைநகரான சிவகங்கையில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வதற்கு போதுமான மைதான வசதி இல்லாததால் காரைக்குடிக்கு சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளதால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கிரிக்கெட் பயிற்சி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story