50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: கௌதமசிகாமணி

50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: கௌதமசிகாமணி

கவுதமசிகாமணிக்கு உற்சாக வரவேற்பு 

விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்ற கௌதம சிகாமணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பொன்.கெளதமசிகாமணி, சென்னையிலிருந்து புதன்கிழமை மாலை விழுப்புரம் வந்தாா்.

தொடா்ந்து, கலைஞா் அறிவாலய முன் பகுதியிலுள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கும், அதைத் தொடா்ந்து அம்பேத்கா் சிலைக்கும் அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.பின்னா், பொன்.கெளதமசிகாமணி கட்சியினா் மத்தியில் பேசியதாவது: விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் போட்டியிடும்,

திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க நாம் இலக்காக கொண்டு தோ்தல் பணியாற்ற வேண்டும். அதற்கான பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா்.நிகழ்வில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா, முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன்,

முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, வளவனூா் பேரூா் செயலா் ஜீவா, நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவா் சித்திக் அலி, நகர நிா்வாகி என்.என்.இளங்கோ, ஒன்றியச் செயலா்கள் கல்பட்டுராஜா, பிரபாகரன், ஜெயபால், வேம்பி ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story