நெசவு செய்து வாக்கு சேகரிப்பு

நெசவு செய்து வாக்கு சேகரிப்பு

திருச்செங்கோடில் நெசவு செய்து நகர மன்ற தலைவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


திருச்செங்கோடில் நெசவு செய்து நகர மன்ற தலைவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
ஏப்ரல் 19 பாராளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது தேர்தல் வியூகத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்மாதேஸ்வரன் அவர்களுக்கு ஆதரவாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தனது ஆதரவாளர்களுடன் திருச்செங்கோட்டில் 33 வார்டு பகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றார். இரண்டாவது வார்டு சண்முகபுரம் பகுதியில் தறி தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளி வீட்டில் நெசவு செய்து திமுக அரசு சவாலர்களுக்கு இலவச மின்சாரம் அளித்ததை சுட்டிக்காட்டி வாக்குகள் சேகரித்தார்

Tags

Next Story