பூக்கொல்லையில் களை கட்டிய நாட்டுக்கோழி சந்தை

பூக்கொல்லையில் களை கட்டிய நாட்டுக்கோழி சந்தை
நாட்டுக்கோழி சந்தை
சேதுபாவாசத்திரம் அருகே பூக்கொல்லையில் பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டுக்கோழி சந்தை களை கட்டியது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அதிக கிராமங்களை உள்ளடக்கிய பகுதியாகும். இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு வசதியாக அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் அதிகம் பேர் தங்கள் வீடுகளில் அதிகமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்த கோழிகளை தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியது போக, மற்றவைகளை அதிக அளவில் தமிழ் புத்தாண்டு, ஆடி பெருக்கு, ரம்ஜான், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் அதிலிருந்து கிடைக்கும் வருமானம் பண்டிகைகளுக்கு பயன்பெறும் வகையில் அமைந்துவிடும். இதனால் கோழி விற்பனை செய்யவும், நாட்டுக்கோழி வளர்ப்பை கிராம பகுதி பெண்கள் அதிகம் விரும்பி செய்து வருகின்றனர் அப்படி வளர்க்கப்படும் கோழிகள வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை போல் பூக்கொல் கடைவீதியில் கோழி மட்டும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது இங்கு சுற்று வட்டாரங்களில் உள்ள பொதுமக்கள் கோழி விற்பனை செய்யவும் வாங்குவதற்கும் அதிகளவில் குவிந்து வருகிறார்கள். மேலும் புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மொத்தமாக வாங்கி ஏற்றி சென்றுவிடுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. பண்டிகை கால விற்பனைக்காக வீடுகளில் வளர்த்து வந்த கோழிகள், கோழி கழிச்சல் போன்ற நோயினால் அதிகமாக அழிந்து விட்டது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமையும், இன்று செவ்வாய்க்கிழமையும் பூக்கொல்லையில் நாட்டுக்கோழி சந்தை களைகட்டியது. இங்கு பல லட்சம் ரூபாய்க்கு கோழி விற்பனை செய்யப்பட்டது

Tags

Next Story