புதுகையில் வாரச்சந்தை கட்டுமான பணிகள் ஆய்வு

புதுகையில் வாரச்சந்தை கட்டுமான பணிகள் ஆய்வு

வார சந்தை கட்டுமான பணி ஆய்வு 

புதுக்கோட்டையில் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ. 6 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நகரில் பாரம்பரியம் மிக்க சந்தைப்பேட்டை பகுதியில் நவீன கட்டுமானங்களுடன் தினசரி சந்தை கட்டப்படும் என கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன்படி, 160 கடைகளுடன், பிரம்மாண்டமான இரும்பு மேற்கூரை அமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, துணைத் தலைவர் மு. லியாகத்அலி ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நகராட்சிப் பொறியாளர் முகமது இப்ராஹிம், உதவிப் பொறியாளர் கலியகுமார் ஆகியோர் பணிகள் குறித்து விளக்கினர்.

விரைவில் கட்டுமானப் பணிகளை முடித்து, பொதுமக்களுக்குப் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் நகர்மன்றத் தலைவர் அறிவுறுத்தினார்.

Tags

Next Story