வாராந்திர காய்கறி சந்தை கூடியது

வாராந்திர காய்கறி சந்தை கூடியது

சந்தை

அலமேடு பகுதியில் வாராந்திர செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடியது பொதுமக்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை அலமேடு பகுதியில், வாராந்திர செவ்வாய்க்கிழமை சந்தை கூடி வருகிறது. கடந்த சில வாரங்களாக மாலை நேரத்தில் மழை பெய்ததால், சந்தையில் குறைந்த அளவு வியாபாரிகளே கடைகளை அமைக்க வந்திருந்தனர் .

இன்று மழை ஏதும் பெய்யாததால் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் சுபமுகூர்த்த விசேஷ நாட்கள் என்பதால் வழக்கத்தை காட்டிலும் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்...

Tags

Next Story