ராணிப்பேட்டையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்!

ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டது. மனங்களை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி குமார் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், இந்த குறைதீர் கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, வெங்கடகிருஷ்ணன், சீராளன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story