பளுதூக்கும் போட்டி - அசத்திய வீராங்கனைகள்

ஈரோட்டில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழ் பிட்னஸ் அசோசியேஷன் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. பென்ச்பிரஸ் மற்றும் டெட் லிப்ட் பிரிவுகளில் ஈரோடு, சேலம், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 பெண்களும், 200 ஆண்களும் பங்கேற்றனர். பெண்களுக்காக 52 முதல் 82.5 கிலோ எடை பிரிவிலும், ஆண்களுக்கு 52 முதல் 90 கிலோ எடை பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரொக்க பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்படுகிறது. நடைபெற்ற போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாற்றுதிறனாளிகள் பிரிவில் கேலோ இந்தியா பளுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சந்திரா 65 கிலோ எடையை தூக்கி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags

Next Story