சட்ட பேரவை உறுதிமொழிக் குழு தலைவருக்கு வரவேற்பு

சட்ட பேரவை உறுதிமொழிக் குழு தலைவருக்கு வரவேற்பு

வரவேற்பு 

தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை குறித்து டிசம்பர் 22ஆம் தேதி ஆய்வு மேற்கொள்வதற்காக டிசம்பர் 21ஆம் தேதி, மாலை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுதிமொழிக் குழுவின் தலைவரும் பண்ருட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகனை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் அரசுபணிகள் குறித்து கலந்துரையாடல் செய்தனர். இந்நிகழ்ச்சியின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story