வந்தே பாரத் ரயிலுக்கு ஓசூரில் வரவேற்பு

கோவை - பெங்களூர் இடையே தொடங்கப்பட்ட வந்தே பாரத் இரயிலை ஒசூரில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
அயோத்தி சென்றுள்ள பாரத பிரதமர் மோடி, கோவை பெங்களூர் இடையேயான இரயில் உள்பட ஒரே நாளில் 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று வழிதடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று 4 மணிக்கு வந்தே பாரத் ரயிலாக கோவை - பெங்களூர் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பயணிகள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பயணமாக கோவையிலிருந்து பெங்களூர் நோக்கி ஒசூர் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலுக்கு ஒசூர் பாஜகவினர் பாஜக கொடிகள் மற்றும் தேசிய கொடியை அசைத்து மலர்தூவி வரவேற்றனர். வந்தே பாரத் இரயிலினை காண பள்ளி,கல்லூரி மாணவர்கள் உட்பட 500க்கும் அதிகமானோர் குவிந்து தங்களது செல்போன்களில் படம் பிடித்து சென்றனர்.

Tags

Next Story