கிறிஸ்துமஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்

கிறிஸ்துமஸ்:  மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
நல உதவிகள் 
இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு செயின்ட் பேசில் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சுண்டல், பாசி பருப்பு மற்றும் அரிசி குக்கர் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 150 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிறிஸ்தவ சேவை நிலைய அறக்கட்டளை நிறுவனர் எஸ்.ஜெயராஜ் கிருஷ்ணன், தாளாளர் டாக்டர் ஜெயசீலி கிருஸ்டி ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். இதில் இயக்குனர்கள் டேவிட் லிவிங்ஸ்டன், நீவா லில்லி எஸ்தர், ஜாய் ஆக்னிஸ், சோபியா லிவிங்ஸ்டன், வீரராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயக்குனர் பேசில் பிரைட் செய்திருந்தார்.

Tags

Next Story