அதிமுக சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி

அதிமுக சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி

அதிமுக சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் ஏற்பாட்டில் 200 ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்தில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் புத்தகப்பை, நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்டம் வழங்கும் விழா தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, மேம்பாலம் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் 200 ஆட்டோக்களில் வந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசினார்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளருமான இரா.சுதாகர், மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் தா.மி.பிரபு, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், பில்லா விக்னேஷ், உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

Tags

Next Story