விபத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு காப்பீடு நிவாரண தொகை

ராமநாதபுரத்தில் பால்வளம் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விபத்தில் காயமடைந்த மீனவர்களுக்கு காப்பீடு நிவாரண தொகையை வழங்கினார்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விபத்து காப்பீடு நிவாரணத் தொகை வழங்கும் விழா நடந்தது. இதில் மீனவர் நலத்துறை மூலம் 164 பயனாளிகளுக்கு 83.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். எந்த மாநிலமும் வழங்காத அளவிற்கு மீனவர்களுடைய காப்பீட்டு நிறுவனம் வழங்காத தொகையை தமிழக அரசே வழங்கும் என உத்தரவிட்டார். மீனவர்களை காக்கும் முதல்வராக விளங்கி வருகிறார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags

Next Story