ஈரோடு : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோடு : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

ஈரோட்டில் 1002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மதுவிலக்கு, ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி 1002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருவாய்த்துறையின் சார்பில் 907 பயனாளிகளுக்குரூ.11,13,40,800/- மதிப்பீட்டிலும், மதுவிலக்கு மற்றும் அயத்திரவைத் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ. 15,00,000/- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.24,13,000/- மதிப்பீட்டிலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.48,44,575/-மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,00,000/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 1002 பயனாளிகளுக்கு ரூ.12,05,98,375/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

Tags

Next Story