அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில்,உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி இளைஞரணி செயலாளர் ஆனந்தன் ஏற்பாட்டில் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விருந்து பரிமாறினார்.இந்நிகழ்வின் போது, அச்சிறுப்பாக்கம் நகர கழக செயலாளர் A.E.முருகதாஸ்,வெங்கட்ராம், பேரூர் மன்ற உறுப்பினர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story