மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 25 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.77 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்ய வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தின் மூலம், 20 மாற்றுத் திறனாளிகளின் இயற்கை மரணங்களுக்கு, தலா ரூ. 17 ஆயிரத்துக்கான காசோலைகள், 2 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர நாற்காலிகள், 2 பேருக்கு தலா ரூ. 8 ஆயிரம் மதிப்பி மடக்கு சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு நடைப் பயிற்சி உபகரணம் உள்பட மொத்தம் 25 பேருக்கு மொத்தம் ரூ. 3.77 லட்ச மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டனமுன்னதாக, மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 629 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் பா. ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), ச. சிவகுமார் (அறந்தாங்கி) உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags

Next Story