கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சி

கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சி

கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது

கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிறுவனா் பொன்அன்பழகன் தலைமை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கலந்து கொண்டு, 126 பேருக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் நல உதவித் தொகையாக வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக செல்லையா, பொன்ராஜ், காசிராணி மற்றும் திமுக மாநில விவசாய அணி துணைச் செயலா் கு. செல்லப்பா, இலக்கிய மன்றத் தலைவா் எஸ். செல்வன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் நாராயணசிங்கம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ரமேஷ், கனகராஜ்முத்துபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story