முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

ஸ்டாலின் பிறந்தநாள் விழா

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில்,கத்திரிசேரி கிராமத்தில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம், விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், ஒன்றிய கழக செயலாளர் பொன் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். முன்னதாக பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story