மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

காரிமங்கலத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காரிமங்கலம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவை தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சூடப்பட்டி சுப்பிரமணி, சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் திமுக வேட்பாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், அன்பழகன் தலைமை செயற்குழு உறுப்பினர் சேர்மன் மனோகரன், நகர செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முருகன் கூட்டத் தீர்மானங்களை வாசித்தார்.

மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் வாக்கு எண்ணிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு காலம் மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்த கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அனைத்து பகுதிகளில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், முனியப்பன், சரவணன், முத்துக்குமார், சந்திரமோகன், சிவப்பிரகாசம், செங்கண்ணன் டாக்டர் பிரபு, ராஜசேகர், தமிழழகன், ஊராட்சி தலைவர்கள் உமாகுப்புராஜ், கெளரி திருக்குமரன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story