தி.மு.க., குறித்து அப்சரா ரெட்டி என்ன பேசினார்?

தி.மு.க., குறித்து அப்சரா ரெட்டி என்ன பேசினார்?

நீலகிரியில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி தேனாடுகம்பை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.


நீலகிரியில் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி தேனாடுகம்பை பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்சரா ரெட்டி பேசியதாவது, மாநிலத்தில் ஆளும் தி.மு.க.,வும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வும் தமிழகத்திற்கு இதுவரை எந்த ஒரு செயல் திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உங்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடி அனைத்தையும் பெற்று தருவார். உதயநிதி ஸ்டாலின் தெரு தெருவாக செங்கல்லை தூக்கி செல்கிறார். ஆனால் நீட் தேர்வை தடுக்க எதுவும் செய்யவில்லை. ரகசியம் இருப்பதாக தி.மு.க.,வினர் சொல்லிக் கொண்டிருகின்றனர். தி.மு.க., வுக்கு தெரிந்த ஒரே அரசியல் அராஜகம் மட்டும் தான். தற்பொழுது தேர்தல் பரப்புரையில் தி.மு.க.,வினர் ஆபாச பேச்சுக்களை பேசி வருகின்றனர். எங்கு சென்றாலும் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியை பற்றி தவறாக பேசுகிறார். குடும்ப அரசியல் செய்யும் தி.மு.க.,வை அகற்ற வேண்டும். அதேபோல் பா.ஜ.க., வில் மத்திய அமைச்சராக உள்ள எல். முருகன் நீலகிரிக்கு இதுவரை எதுவுமே செய்யவில்லை. ஆனால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நல்ல திட்டங்கள் தந்தனர். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் தேர்தல் பொறுப்பாளர் சஜ்ஜீவன், முன்னாள் எம்.பி அர்ஜுனன் உள்பட பலர் இருந்தனர்.

Tags

Next Story