காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தால் பரபரப்பு !

காதல் ஜோடி  பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தால் பரபரப்பு !

காதல் ஜோடி

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தால் பரபரப்பு. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகள் சுவாதி(19) இவர் அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் குறித்து அறிந்த பெற்றோர் இவர்களை கண்டித்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் சுவாதி வசதியானவர் என்பதாலும், மணிகண்டன வசதி குறைவானவர் என்பதாலும் இவர்களது காதலை ஏற்காத பெற்றோரை எதிர்த்து. திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடியில் உள்ள ஒரு கோவிலில் கடந்த ஜூன்.16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டு, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஜூன் 18ஆம் தேதி தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூன் 19ஆம் தேதி பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து புது மணப்பெண் சுவாதி தெரிவிக்கும் போது, மணிகண்டனின் பெற்றோர் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இவர்களை தேடி வந்த சுவாதியின் பெற்றோர் அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், மணிகண்டனின் வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களிடம், தகராறில் ஈடுபட்டு அவர்களது பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவித்த சுவாதி தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

காதல் ஜோடியின் மனுவை பெற்ற காவல் துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்து, அவர்களது பெற்றோர்களை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் காவல் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story