அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் படுகாயம்

அரசுப் பேருந்து மோதியதில்  சிறுவன் படுகாயம்

கோப்பு படம் 

அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தார்.

அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் படுகாயம் பென்னாகரம், டிச. 17: பென்னாகரத்தில் அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் படுகாயம் அடைந்தார். தர்மபுரி மாவட்டம், பருவதனஅள்ளி ஊராட்சிக்குபட்ட எரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் தேவ பிரசன்னா (5).இவர், கடந்த திங்கள்கிழமை மாலை பென்னாகரம் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் இருந்த தந்தையைக் காண தர்மபுரி பிரதான சாலையைக் கடந்து சென்றுள்ளார்.

அப்போது, பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த அரசுப் பேருந்து சிறுவனின் மீது மோதியது. இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில், அவரை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story