கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

கிணறு தூர்வாரும்போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

காவல்துறை விசாரணை

தர்மபுரி அருகே அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதியில் கிணறு தூர்வாரும் போது மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
தர்மபுரி அருகே உள்ள குப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 26). தொழிலாளி. இவர் அன்னசாகரத்தான் கொட்டாய் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். நேற்று மாலை 5 மணி அளவில் அப்போது எதிர்பாராதவிதமாக குமார் மற்றும் அவருடன் பணியில் ஈடுபட்ட பெரியசாமி, ஆறுமுகம் ஆகியோர் மீது மண் சரிந்து விழுந்தது. இதில் காயமடைந்த 3 பேரையும். அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார், குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story