ஓட்டு போடுகிறேன். நான் ஏன் அரசியல் பேசக்கூடாது? -மதுரை ஆதீனம்

ஓட்டு போடுகிறேன். நான் ஏன் அரசியல் பேசக்கூடாது? -மதுரை ஆதீனம்

'நானும் ஓட்டு போடுகிறேன். நான் ஏன் அரசியல் பேசக்கூடாது?' என மதுரை ஆதீனம் கூறினார். 

'நானும் ஓட்டு போடுகிறேன். நான் ஏன் அரசியல் பேசக்கூடாது?' என மதுரை ஆதீனம் கூறினார்.

மதுரை ஆதீனம் இருக்கும் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். அப்பொழுது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவரை தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் 293-வது ஆதீனம் தெரிவித்ததாவது;

கோவில் மாநகர் காஞ்சிபுரத்தில் பல்வேறு கோயில்கள் உள்ளன.‌ மிகவும் சிறப்பான ஊர் காஞ்சிபுரம் மாநகர் . காஞ்சிபுரம் வந்ததில் மிக மகிழ்ச்சி. நித்யானந்தா தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , அவரை மடத்தை விட்டு அப்பொழுது நீக்கப்பட்டு விட்டார். இனி அவர் நுழைந்தாலும் அதை விடமாட்டார்கள். நாட்டுக்குள்ள அவரு வந்தாலே கைது செய்யப்படுவார். அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்தது நல்லது தான். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் . பாமக வெற்றி பெற்றால்தான் உண்டு. இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி அதிக செல்வாக்கு உண்டு . சைவ மற்றும் இறை நெறி பரப்பும் மடாதிபதிகள் அரசியல் குறித்த கருத்துக்கள் தெரிவிக்க பல எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை குறித்து கேட்டபோது, அரசியல் கருத்துகளை ஏன் நான் சொல்லக்கூடாது.

ஜனநாயக நாட்டில் நான் ஓட்டு போடுகிறேன். ஒரு கிறிஸ்தவ அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. இஸ்லாமிய அமைப்பினர் கூறுகிறார்கள் அல்லவா. அதேபோன்று நாங்கள் ஏன் சொல்லக்கூடாது. எஸ்றா சற்குணம் கூறும் போது நான் ஏன் கூறக்கூடாது. நாங்கள் சொல்லாமல் இருந்தால் என் தமிழர்களை கொலை செய்வார்கள். அதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா ? தமிழ்நாட்டில் இருக்கிறேன் நான் தமிழன், நானும் ஓட்டு போடுகிறேன் . எனக்கு ஓட்டு உரிமை உள்ளது எனக்கும் உரிமை உள்ளது.‌ வயிற்று எரிச்சலில் தான் தமிழர்களைக் கொன்றார்கள். அதை மக்கள் மறந்துட்டார்களே என தெரிவித்தார்.

Tags

Next Story