திருப்பத்தூரில் பரவலாக மழை

திருப்பத்தூரில் பரவலாக மழை

திருப்பத்தூரில் பரவலாக மழை பெய்யும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

திருப்பத்தூரில் பரவலாக மழை பெய்யும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பரவலாக சாரல்மழை பெய்து வருகிறது பள்ளி மாணவ மாணவியர்கள் மழையில் குடைப்பிடுத்து செல்லும் நிலை தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்,கந்திலி, நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் குடை பிடித்துக் கொண்டும் மாழையில் நனைந்த படியும் பள்ளிக்குச் சென்றனர். இதன் காரணமாக அருகே உள்ள மாவட்டங்களான வேலூர்,ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விடுமுறை அளித்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் நனைந்தபடி சென்றனர் திருப்பத்தூர் மாவட்டத்திற்க்கு பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து இருக்கலாம் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story