கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது

கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது
இறந்து போன அன்பழகன்

தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் முட்டக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் கிட்டு மகன் அன்பழகன் (62). பந்தல் காண்ட்ராக்டர். இவருக்கு திருமணமாகி கல்யாணி (54) என்ற மனைவியும் விக்னேஸ்வரி என்ற மகளும் தினேஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். மகனும், மகளும், திருமணமாகி தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் அன்பழகன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கணவன் அன்பழகன் கல்யாணியை அடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மனைவி அருகில் கிடந்த கட்டிங் மிஷினால் அன்பழகன் மண்டையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த அன்பழகன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த கல்யாணி அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அன்பழகனை, மீட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பனந்தாள் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற கல்யாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனை மனைவியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகன் மனைவி கல்யாணி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story