கணவனை அடித்த நபரின் மண்டையை உடைத்த மனைவி

கணவனை அடித்த நபரின் மண்டையை உடைத்த மனைவி

மயிலாடுதுறை அருகே அரும்பூரில் தனது கணவரை அடித்த  நபரை கம்பியால் மண்டையை உடைத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே அரும்பூரில் தனது கணவரை அடித்த  நபரை கம்பியால் மண்டையை உடைத்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

. மயிலாடுதுறை அருகே அரும்பூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி சரஸ்வதி( 42) மயிலாடுதுறை அருகே அரும்பூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்கரபாணி மகன் முருகானந்தம் (37)இவர் அதே பகுதியில் மேஸ்திரியான பாஸ்கர் என்பவரிடம் நின்று கொண்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தார், அந்த நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் மற்றும் ராதாகிருஷ்ணன் மகன் மாரியப்பன் ஆகிய இருவரும் வாய் தகராறில் ஈடுபட்டு கைகலப்பு தொடங்கிய போது இதை கண்ட முருகானந்தம் சென்று இதுவரையும் விலக்கி பிடித்து தள்ளினார்.

இதைக் கண்ட மாரியப்பன் மனைவி சரஸ்வதி தன் புருஷனை அடிப்பதாக நினைத்து தான் எடுத்து வந்த இரும்பு கம்பியால் முருகானந்தத்தை பின் மண்டையில்அடித்துப் போட்டுவிட்டு மாரியப்பனை அழைத்துச் சென்றார். காயம் பட்ட மாரியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் அளித்த புகாரின்பேரில் சரஸ்வதி மீது செம்பனார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Tags

Next Story