தியாகத்துருக்கத்தில் மனைவி மாயம்: கணவர் புகார்

தியாகத்துருக்கத்தில் மனைவி மாயமனதாக கணவர் புகார் அளித்துள்ளார்.

தியாகதுருகத்தில் மனைவியைக் காணவில்லை என போலீசில், கணவர் புகார் அளித்துள்ளார். சேலம் மாவட்டம், வட சென்னிமலை அடுத்த சம்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தமிழ்ச்செல்வன், 31; இவரது மனைவி அனு, 28; இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த 27ம் தேதி தமிழ்ச்செல்வன் தனது மனைவி அனுவை தியாகதுருகம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்து தங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது அனுவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story