மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

மனைவி மகன் மாயம்: கணவர் புகார்

 மனைவி மகன் மாயம் கணவர் புகார்

காமராஜர் நகர் பகுதியில் ரூ.1 லட்சம் ,18 சவரன் நகை மற்றும் மகனுடன் மனைவியை காணவில்லை என கணவர் புகார். போலீசார் விசாரத்து வருகின்றன.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சக்திவேல், 38; இவரது மனைவி அன்னலட்சுமி, 26; நேற்று முன்தினம் வீட்டிலிருந்த இவர் தனது 5 வயது மகன், ரூ 1 லட்சம் பணம் மற்றும் 18 சவரன் தங்க நகையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story