காட்டுப்பன்றி வேட்டை: காட்டிக் கொடுத்தவருக்கு தீ வைப்பு

காட்டுப்பன்றி வேட்டை: காட்டிக் கொடுத்தவருக்கு தீ வைப்பு

காட்டுப்பன்றி வேட்டை


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த மேல் வில்லிவனம்கோபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்வயது 44 இவர் வனத்தில் வனத்துறையில் காட்டுப்பன்றி வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக வனத்துறைக்குஇதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தகவல் தெரிவித்ததால் ரமேஷ் ரூபாய் 10000 அபராதம் கட்டி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் முருகன்வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது ரமேஷ் முருகன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார் முருகன் அலறல் சத்தம் கேட்டு மனைவி சந்தியா மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயணைத்து சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முருகன் மனைவி சந்தியா கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் கைது செய்து போளூர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

Tags

Next Story