அரசு பேருந்தை மறித்த காட்டு யானைகள்; பயணிகள் அச்சம்.

அரசு பேருந்தை மறித்த காட்டு யானைகள்; பயணிகள் அச்சம்.

அரசு பேருந்தை மறித்த காட்டு யானைகள் 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் அரசு பேருந்தை மறித்த காட்டு யானைகளால் பயணிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கெத்தை மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் யானை கூட்டம் உலா வருகிறது. அவ்வப்போது சாலைகளில் உலா வரும் காட்டு யானைகள் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து உட்பட இதர வாகனங்களை வழிமறிப்பது தொடர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் அரசு பேருந்து மஞ்சூர் - கெத்தை மலைப்பாதையில் செல்லும் பொழுது யானை கூட்டம் சாலையில் உலாவியது.

அப்போது பேருந்தை கண்டவுடன் யானைக் கூட்டத்திலிருந்து, ஒரு காட்டு யானை பேருந்தை நோக்கி தாக்க ஓடி வந்தது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். பின்பு வழி விடாமல் சாலையிலேயே நடந்துச்சென்ற யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றவுடன் அரசு பேருந்து சென்றது.

Tags

Next Story