கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்: விவசாயிகள் அச்சம்

கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம்:  விவசாயிகள் அச்சம்

யானைகள் அட்டகாசம் 

கொடைக்கானலில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கிராமங்களான பேத்துபாறை, அஞ்சுவீடு, பாரதி அண்ணா நகர், மங்களங்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைக் கூட்டங்கள் தொடர்ந்து முகாமிட்டு விவசாய நிலங்களையும்,

விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றது, மேலும் வனத்துறையினர் காட்டு யானைகளை தற்காலிகமாக விரட்டுவதும், மறுநாளே மீண்டும் விவசாயப் பகுதிகளுக்குள் மீண்டும் வருவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது, இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பள்ளங்கி கோம்பை பகுதியில் 4-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அப்பகுதியில் உள்ள மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில் முகாமிட்டு அங்கு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துள்ளனர், மேலும் சேதமடைந்த பீன்ஸ் பயிர்களுக்கு உரிய இழப்பீடு துரிதமாக வழங்கவும், வனத்துறையினர் விரைவில் யானைக் கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளங்கி கோம்பை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story